Posts

Showing posts from January, 2021

ஆத்தங்கரை ஓரம்

Image
  இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சிந்தூர். நதிக் கரையோரம் அமைந்திருக்கும் பல கிராமத்திற்கு  அணைக்கட்டு வடிவில் ஆபத்து வருகிறது. பிறந்து, வளர்ந்த தாய் மண்ணைப் பிரியமனமில்லாமல், கோவிந்த் பாயி அவரது மகன் சிமன் தலைமையில் அந்த கிராம பழங்குடி மக்கள் அனைவரும் அரசை எதிர்த்து, எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.3,20,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த படுகிறது. அதுவும் அணைகட்டானது சித்தூருக்கு பத்து கிலோமீட்டருக்கு முன்னால் லக்ஷ்மன் நகரப் பகுதிகள் தான் அணைகள் கட்டுவதற்கு முற்றிலும் ஏற்றதாக இருக்கும். ஆனால் அந்த குடியிருப்பு பகுதிகள் மாநிலத்தின் முக்கிய வர்த்தகர்கள், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் அவருடைய அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைய இருக்கும் பகுதிகள். அதனால் 10 கிலோ மீட்டருக்கு தள்ளி பழங்குடியினர் வாழும் பகுதியில் இந்த அணை வருகின்றது. சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்கள் சீரழிந்து போகும் என்பதால், சமுக ஆர்வலர்கள் ராதா, சந்தீப், நிதின், அரசு அதிகாரி சுதிர் அவரது மனைவி யூதிகா ஆகியோர் அணைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர். அரசை எதிர்த்துப் போராடி, அப்பாவி மக்கள் வெற்றி

கடல் புறா- முதல் பாகம்

Image
        கடல் புறா - முதல் பாகம்  ஒரு நாவலை படிக்க இத்தனை நாட்கள் நான் எடுத்துக் கொண்டதில்லை. முதல் பாகத்தை முடிக்கவே அதிகப்படியான நாட்கள் கடந்து சென்றன.பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன்.   இவர் பிரபலமான  தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. வீரராஜேந்திர சோழன் காலத்தில்  கலிங்க- சோழர்களின் எல்லை விவகார சமயத்தில் நடக்கும் கதை. புகார் நகரத்திலிருந்து வீரராஜேந்திர சோழரின் சமாதான ஒலையுடன் பாலூர் பெருந்துறைக்கு சோழர்களில் படை தலைவனான இளையபல்லவன் என்று அழைக்கப்படும் கருணாகர பல்லவன் வருகிறார். அங்கு சுங்க அதிகாரியான சேந்தன் இளையபல்லவனை போகாமல் தடுத்து பாலூர் பெருந்துறையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்குகிறார். சோழர் இளவரசர் அநபாயன் கைது செய்யப்பட்டதையும், அவர் அந்த சிறைசாலையில் இருந்து தப்பித்ததையும் கூறுகிறார்.கலிங்க படை தன்னை தூரத்தி கொண்டு வருவதை உணர்ந்த இளையபல்லவன் தப்பித்து விருந்தினர் விடுதிக்கு நுழைக்கிறார். அங்கு, கடாரத்து இளவர