Posts

Showing posts from 2022

ஒற்றை சிறகு ஓவியா

Image
                    ஒற்றை சிறகு ஓவியா - விஷ்ணுபுரம் சரவணன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவிற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். அப்போது தான் அணிந்திருக்கும்  வேஷத்தில் இருந்து ஒவ்வொரு பொருளையும் எடுத்து தன் தோழி ஓவியாவிற்கு அணிந்து விடுகிறார்கள். சிறிது நேரத்தில் ஒற்றைச் சிறகுடன் ஓவியா உருவாகிறாள். அற்புதம் நிகழ்கிறது. அந்த அற்புதத்தின் மூலம் பல நிகழ்வுகளை செய்கிறாள். ஓவியாவின்  இந்த அற்புதத்தையே விழாவில் கலை நிகழ்ச்சியாக நடத்தலாம் என நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா உதவுகிறார். இவர்களின் அற்புதத்தை பார்த்து அதன் ஒரு பொருளைத் திருடி மறைத்து வைக்கிறான் ஒருவன். அந்த அற்புத பொருளை தேடும் பயணத்தில் பெற்ற அனுபவங்கள். கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதா ?, அதில் அந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டதா ? என்பதை மெல்ல மெல்ல ஒற்றைச் சிறகு ஓவியாவோடு நம்மை பறக்க செய்திருக்கிறார். அற்புதங்களைக் கண்டு பிடிக்க ஒவ்வொருவரின் கனவுக்குள் சென்று அதன் ரகசியங்களை தேடுவது, குழந்தைகள் சந்திக்கும் சிறுசிறு பிரச்சனைகள், அவர்கள் எதிர்கொள்வதும

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

Image
ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்"  நாவலை படிக்க ஆரம்பிக்கும் போது ஏதோ ! ஒரு புதிய சிந்தனை கிடைக்க போகிறது என்று ஜேகே அவர்களின் எழுத்துக்கள் மேல் இருந்த அபார நம்பிக்கையில் படிக்க ஆரம்பித்தேன்.நாவல் பாதி வரைக்கும் படித்தது அப்பறம் நாவலில் வர ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும்,நண்பர்கள்,உறவினர்கள்ன்னு ஒவ்வொருவரையா நினைத்தபடி வாசிக்க,வாசிக்க சினிமா காட்சி மாதிரி மனதில் நினைக்க ஆரம்பித்தேன்.அதில் வர கதை நாயகன் ஹென்றி.அது நான் தான் என்று கற்பனை செய்து நாவல தொடர்ந்து படித்தேன்.கதைப்படி  பல மன வேதனையால் பாதிக்கபடும் கிருஷ்ணராஜபுரத்தில் முக்கியமானவர் சபாபதி. பல மனகசப்பால் பிறந்து வளர்ந்த தன் ஊரை விட்டு யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு சென்று விடுகிறார்.வாழ்க்கை பாதை அவரை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.அதில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை. வளர்ப்பு மகனாக ஹென்றி கிடைக்கிறான்.தினமும் குடி, மகனோடு விளையாட்டுன்னு வாழ்கிறார் சபாபதி. தன் கிராமம் பற்றியும்,தன் பழைய வாழ்க்கை பற்றியும் ஹென்றியிடம் நிறைய சொல்லுவார் சபாபதி. இறப்பதற்கு முன் தன் சொத்துக்களை ஹென்றி பெயரில் மாத்தி எழுதி

சில நேரங்களில் சில மனிதர்கள்

Image
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்       3 ஆண்டுகளாக இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.பல புத்தக கடைகளில் கிடைக்கவில்லை,googleல் பலரின் இந்த புத்தகம் பற்றிய கருத்துகளை பார்த்த போது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.ஒரு வழியாக சென்னையில் புத்தகத்தை வாங்கி படித்தேன்.3 ஆண்டு ஆர்வம் புத்தகம் படிக்கும் போதே கதையோடு ஓன்ற வைத்தது,1970 ல் எழுதிய அக்னி பிரவேசம் சில நேரங்களில் சில மனிதர்கள் என பெயர் மாற்றமாக வெளியாகி உள்ளது. பதினாறு வயதுடைய பர்பன பெண்ணான கங்கா ஒரு மாலை பொழுதில் கல்லூரி முடிந்து வரும் வழியில்  யாரென்று தெரியாத ஒரு நபரால் தனது சுய நினைவை இழந்து தனது கற்பை பறி கொடுகிறாள்.உடை கிழிந்த கோலத்தில் தன்னையே இழந்து வீட்டிற்கு வந்து தாய் கனகத்திடம் குழந்தை போல விஷயத்தை கூறி அழுகிறாள்.தலையில் இடி விழுந்தது போல் மனகுமுறால் கதற,ஊரரால் தூற்றபட்டு அண்ணன் கணேசன் அம்மா,கங்கா வை துரத்தி விடுகிறான்.மாமா வெங்குடு ஆதரவில் வளர்கிறார்.குற்ற உணர்வு, வேறு வாழ்க்கையை தேடி கொள்ளாமல் தன் தாயுடன் தனிமையில் வாழ பழகுகிறாள்.12 ஆண்டு கடந்து செல்கிறது.ஆதரவு தருபவர் சும்மாவ தருவார். வெங்

நகல்

Image
                                    நகல் மாலை நேரம் ஆகிவிட்டது. மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலனுக்கு இருட்டுவதற்குள் பாதுகாப்பாக தன் வீட்டை சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருந்தார்கள்.  கபிலனின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ,  பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. காரணம் அவன் இந்த பகுதியிலே வாழ்ந்து பழகியவன். ஹரிக்கு சற்று சிரம்மாகவே இருந்தது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும்,  மனதை மயக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகும், நறுமணமும்,குளிர்ந்த காற்றும் அவ்வப்போது ஹரியை தாமதபடுத்தி கொண்டிருந்தன.  திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது.  உயரமான மரங்கள்.  மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி காணாததை கண்டவன் போல மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலனுடன் ஹரி நடந்து கொண்டிருந்தான்.  குளிர் காலம் என்பதால்,மாலை ஐந்து மணிக்கெல்லாம் பனி சூழ தொடங்கி, இருட்ட ஆரம்பித்தது.சற்று ந

தண்ணீர்

Image
அசோகமித்திரன் அவர்களின் "தண்ணீர்" நாவல்  வாசிக்க ஆர்வம் ஏற்பட்டு,புத்தகம் வாங்கி இன்று பயணத்தில் வாசிக்க தொடங்கினேன்.சில மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய் நாவல். ஆனால் அது தரும் தாக்கம் அதை அப்படி எளிதில் கடக்கவிடாது. சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டு தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை தண்ணீர் பிரச்சனையோடு சேர்த்து கூறப்பட்டுள்ளது.  "யாரோ ஒரு பெண் தண்ணீருக்காக இங்கும் அங்கும் அலைந்ததை தொடர்ச்சியாக பார்த்ததன் விளைவு இக்கதை உருவாக்கம்" என்கின்றார் அசோகமித்திரன்.   சினிமா கதாநாயகியாகும் கனவுடன் வாழும் ஜமுனா.ஆசை நிராசையாகிறது. பாஸ்கர் என்பவரால் ஏமாற்றப்படுவது,சுற்றி இருக்கும் மனிதர்களால் ஒதுக்கவும் படுகிறாள். ராணுவத்தில் பணிபுரியும் கணவனை பிரிந்து பெண்களுக்கான விடுதியில் தங்கி, பல விதமான நெருக்கடியில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா.  நோய்வாய்ப்பட்ட கணவனுக்கும், வன்மத்தின் மறு உருவமான மாமியாருக்கும் இடையில் நம்பிக்கையின்றி மன உறுதியுடனும், விரக்தியுடனும் காலம் தள்ளும் டீச்சரம்மா. இவர்களின் வாழ்க்கை போராட்டத்தையும்,தண்ணீரோடு பொருத்தி நகரத்துகிறார். கதை ஒரு ஆரம்பம

சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்

Image
சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்        சினிமா மோகத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிப்போவதை கதைமூலமாக ஜேகே அவர்கள் தெளிவு படுத்துகிறார்.1975 க்கு முந்தைய காலகட்டங்களிலே கதைக்களம் அமைகிறது. அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை என்று இரண்டில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்தவர் வாத்தியார் (எம்ஜிஆர்).அவரது மிக தீவிர ரசிகராக இருக்கிறார் ரிக்ஷா வண்டி ஓட்டும் செல்லமுத்து மற்றும் அவனது மனைவி சித்தாள் கம்சலை.புருஷன விட பொண்டாட்டி கம்சலை வாத்தியாருக்கு மிக தீவிர ரசிகை.வாத்தியார் படம் புதிதாக ரிலீஸ் ஆனால் தியேட்டரில் புருஷனுக்கு முன்னால் இவள் சென்று பார்ப்பாள். படம் பார்த்து அப்புடியே மயங்கிடுவாள்.படம் பார்க்கும் போது தியேட்டரில் பக்கத்தில் எவனாவது இவளினம் சில்மிஷம் பண்ணால்கூட இவளுக்கே தெரியாது.அவளோ மதிமயங்கி வாத்தியார் படத்தை ரசிப்பாள்.சரி படம் பாக்கும் போது ரசித்தால் பரவயில்லை.டீ கடையில் வாத்தியார் பட பாட்டு ஓடினால் கேட்டு ரசித்து கொண்டே நிற்கிறதும், சுவற்றில் வாத்தியார் போஸ்டர பாத்தால் முத்தம் கொடுக்கிறதும்,வாத்தியாரை நினைச்சுகிட்டே புருஷனோட வாழ்றதும்,வாத்தியார் முகம் போட்ட பனியன் புருஷன் போட்டுருந

ஆலமரம்

Image
                               ஆத்தோரம் ஆலமரம் பல ஆண்டா வளர்ந்த மரம்! ஓங்கி வளர்ந்து தழைத்து தொங்கும் விழுதுகள் நிறைந்த மரம்! நீடித்த வெயில் அடிக்கயில் நிழல் தந்து காத்த மரம்! பல புயல் வந்த போதும் களங்காம நின்ற மரம்! பதினெட்டு பட்டி பஞ்சாயத்துக்கள் நடந்த மரம்! பலரோட நினைவுகளை சுமந்து நிற்கிற மரம்! இப்படி சொல்லிகிட்டே போனாலும்,மூன்று நாட்களா பெய்யுற மழை.மிகப் பெரிய சூறாவளி கரை கடந்து போயிருக்கு.அதனால் 'எப்புடியும் ஆலமரம் சாஞ்சிருக்கும்னு' ஊருக்குள்ள பேசிக்கிறதை கேட்குறப்ப வேம்பனுக்கு மனசு கவலையாவே இருந்தது. சூறாவளி வந்து பல வீடு,கூரை,நிலம்,தோப்பு எல்லாம் சேதரமாகிருக்கு.ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு 'ஆலமரத்துக்கு என்னாச்சுகிற' மனநிலை தான் இருந்தது. இந்த ஆலமரத்தை வேரோட எடுக்க பல வருஷமா,பல பேர் முயற்சி பண்ணிட்டுதான் இருக்காங்க.அதில் ஐந்து வருஷத்துக்கு முன் ஆளும் கட்சி நான்கு வழி சாலை திட்டத்தை கொண்டு வந்தாங்க.ஊர் சுடலமுத்து எதிர்கட்சி எம்எல்ஏ வா இருந்தார். ஊர் மக்களோட சேர்ந்து கடுமையா போராடி ஆலமரத்தை வெட்ட விடாம பண்ணினார்.சாலை திட்டமும் வேறு காரணமா கிடப்பில் போயிடுச்சு. ஆனால்