Posts

Showing posts from March, 2021

பெத்தவன்

Image
பெத்தவன் - இமையம் பெண்ணைப் பெத்தவனின் பார்வையில் கதை நகர்கிறது. தவமிருந்து இருபது வருடங்களுக்குப் பிறகு பழனிக்கு பாக்கியம் பிறக்கிறாள். பாக்கியத்திற்கு பிறகு செல்வராணி.  பாக்கியம் கல்லூரி கடைசி வருடம் படிக்கும் பொழுது கீழ் சாதியைச் சேர்ந்த பெரியசாமியை காதலிக்கிறாள். இதை ஊரார் மூலம் அறிந்து கொள்கிறான் பழனி. பாக்கியத்தையும் கண்டிக்கிறார். தேர்வுக்கு மட்டுமே அனுமதிக்கிறார்கள். சில நாட்களிலேயே திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது  முதல் முறையாகத்  தற்கொலைக்கு முயற்சிக்கிறாள் பாக்கியம். இரண்டாவது முறை பாக்கியத்தை பற்றி பழனி வேறு ஒருவர் மூலமாக கேள்விப்படும் பொழுது  மீண்டும் கண்டிப்பு, மீண்டும் ஒரு திருமண ஏற்பாடு இரண்டாவது முறையும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். இவர்களின் காதலுக்கு அந்த ஊரில் இருக்கும் ஒரே உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பழனியிடம் அவர்கள்  அவன் மகளை கொன்று விடச் சொல்கிறார்கள். ஒருமுறை பிரச்சினை அதிகமாகி பாக்கியத்தின் வாயில் ஊரார்கள் சாணியை கரைத்து ஊற்றி தகாத வார்த்தைகளால் பேசி தலை முடியையும் அறுத்து விடுகிறார்கள். இவ்வளவு கொடும

வாழ்க வாழ்க

Image
வாழ்க வாழ்க - இமையம்் " என் உயிரினும் உயிரான,உடலினும் உடலான,என் உயிர் மூச்சினும் மேலான வாக்காளப் பெருங்குடி மக்களே,(மக்களால் நான், மக்களுக்காக நான்) பிரதான கழகத்தின் கூட்டத்திற்கு மக்களை அழைத்து செல்ல ஆட்களை சேர்க்கின்றனர்.அதில் பேரனின் மருத்துவ செலவுக்காக  உள்ளூர் கட்சி பிரமுகர் வெங்கடேச பெருமாளிடம் பணம் பெற்றுக் கொண்டு கட்சி கூட்டத்திற்கு வருகிறாள் ஆண்டாள்.அவளோடு  கண்ணகி,சொர்ணம் என தெரு மக்கள் புறப்பட்டு பிரதான கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு செல்கின்றனர். அங்கு திடலில்  பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது.ஹெலிகாப்டரில் பத்து மணிக்கு வர வேண்டிய தலைவி வருவதற்கு தாமதமாகவே,மக்கள் கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை அரசியல் பின்னணியோடு, அவர்க்கே உரித்தான  மொழிநடையோடு அற்புதமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் இமையம். நாவலில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் அப்பெரும் கூட்டத்தில் சேரில் அமர்ந்து இருப்பதை கண்ட மூன்று உயர் சாதி பெண்கள் அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த  முயன்றபோது, அப்பெண் "ஓட்டு போட நான் வேணும்! சேர்ல மட்டும் உட்காரக்கூடாதா ?" என கேட்கும் கேள்விகள் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட