ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" 


நாவலை படிக்க ஆரம்பிக்கும் போது ஏதோ ! ஒரு புதிய சிந்தனை கிடைக்க போகிறது என்று ஜேகே அவர்களின் எழுத்துக்கள் மேல் இருந்த அபார நம்பிக்கையில் படிக்க ஆரம்பித்தேன்.நாவல் பாதி வரைக்கும் படித்தது அப்பறம் நாவலில் வர ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும்,நண்பர்கள்,உறவினர்கள்ன்னு ஒவ்வொருவரையா நினைத்தபடி வாசிக்க,வாசிக்க சினிமா காட்சி மாதிரி மனதில் நினைக்க ஆரம்பித்தேன்.அதில் வர கதை நாயகன் ஹென்றி.அது நான் தான் என்று கற்பனை செய்து நாவல தொடர்ந்து படித்தேன்.கதைப்படி  பல மன வேதனையால் பாதிக்கபடும் கிருஷ்ணராஜபுரத்தில் முக்கியமானவர் சபாபதி. பல மனகசப்பால் பிறந்து வளர்ந்த தன் ஊரை விட்டு யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு சென்று விடுகிறார்.வாழ்க்கை பாதை அவரை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.அதில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை. வளர்ப்பு மகனாக ஹென்றி கிடைக்கிறான்.தினமும் குடி, மகனோடு விளையாட்டுன்னு வாழ்கிறார் சபாபதி. தன் கிராமம் பற்றியும்,தன் பழைய வாழ்க்கை பற்றியும் ஹென்றியிடம் நிறைய சொல்லுவார் சபாபதி. இறப்பதற்கு முன் தன் சொத்துக்களை ஹென்றி பெயரில் மாத்தி எழுதி வைக்கிறார்.
 தன் இனம், மதம், பெற்றோர் என எதுவும் தெரியாத ஹென்றி.அது பத்தி கவலை கொள்ளாமல் வாழ்கிறான். தன்னோட வளர்ப்பு அப்பா சபாபதி பிள்ளை இறந்ததற்கு பின்,வளர்ப்பு அப்பா வோட பூர்விக கிராமம் கிருஷ்ணராஜபுரத்துக்கு வருகிறான். வளர்ப்பு தந்தை பிறந்து,வளர்ந்த அந்த ஊரில் தந்தையின் வீட்டிலே வாழ நினைக்கிறான்.வந்தபின் அவன் அந்த கிராமத்தில் சந்திக்கும் நபர்கள்,அவர்களின் அன்பு நிறைந்த நட்பு, பழக்கவழக்கம்,இவன் அந்நியன் என நினைக்கும் கிராம மக்களிடம் இவன் எதிர் கொள்ளும் வினைகள்,நன்மைகள் என கிராமத்து வாழ்க்கையையும்,மனிதனின் வாழ்க்கை குறித்து புரிதலையும் நாவல் மூலம் உணர்த்தியிருக்கிறார் ஜேகே.
நாவலில் என்னை ஹென்றியா! நினைத்து படிக்க ஆரம்பிக்கும் போது,சொத்து யாருக்குன்னு பஞ்சாயத்து நடக்கும் பகுதி.அண்ணா,சொத்தை இவ்வளவு நாளா பாரமரிச்சுகிட்டு வந்த சபாபதி தம்பி துரைக்கு ஹென்றி மீது கோபம் வரும்,மற்ற ஊர் பெரியவர்களுக்கும் ஹென்றிக்கு சொத்த ஒப்படைக்க மனசு இருக்காது.ஆனால்! அந்த பஞ்சாயத்து பகுதி பெரும் திருப்புமுனையாக அமையும்.ஹென்றி பேசுறதும்,அவரோட மனித நேய பண்பு வெளிபடுறதும்.ஊர் மக்கள் ஏத்துகிற தருணம் அருமை.கற்பனையா ! என்னைய ஹென்றியா நினைத்தது எனக்கு பெருமையா இருந்தது.
இன்றைய சூழ்நிலையில தனக்குன்னு இல்லாம மத்தவங்களும் நல்லா இருக்கனும்னு நினைத்து,உதவி செய்யுற ஒவ்வொரு மனித நேயமிக்கவர்களை வாழ்க்கையில் பார்க்க முடியுது.அவர்கள் ஒவ்வொருத்தரும் ஹென்றிதான்.35 ஆண்டுக்கு முன்பு எழுதிய இந்த நாவல்,காலம் கடந்தும் வாசிப்பு அனுபவத்தை தருவதுதான் இதன் சிறப்பு.முந்தைய பதிவில் நான் சொன்னதுதான்.ஜேகே ஓரு தீர்க்கதரிசி.காலம் கடந்தாலும் அவரின் எழுத்துக்கள் வாழும்.அனைவரும் நம்மை போன்ற மனித உணர்ச்சி கொண்டவர்கள் தான்.வாழ்க்கை போக்கில் கிராமத்தில் அன்றாடம் காணும் நிகழ்வுகளை தத்ரூபமாக நாவலில் ஆசிரியர் வெளிபடுத்தியிருப்பது சிறப்பு.பல கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தாலும்,கடைசிவரை அதைபற்றி நினைக்காமல் தொடர்ந்து படிக்க வைத்தது தான் ஜேகே எழுத்தின் சிறப்பு.
மனித நேயமில்ல,யாருக்கும் மனிதாபிமானம் இல்லைன்னு சிலர் சொன்னாலும்,பாதிப்பு ஏற்பட்ட உடனே,ஆகாயத்திலிருந்து பாதிப்பை வேடிக்கை பார்க்காமல்,களமிறங்கி களப்பணி செய்கின்ற நல்உள்ளங்கள் இருக்கின்ற வரைக்கும்,மனித நேயம் அழியாது.புயல், வெள்ள பாதிப்பில் மக்களுக்கு நிதி உதவி செய்து,களபணி செய்யுற அனைத்து மனித நேயமிக்க தோழர்களுக்கு இந்த பதிவின் மூலம் நன்றியை தெரிவிக்கிறேன்.
                                           
கார்த்திக் கிருபாகரன்

Comments

  1. சபாபதி ஊரைவிட்டு போனதற்காரணம் அழகான தியாக உள்ளத்தை காண்பிக்கும்காட்சியாக்கபட்டற்கும்சாபாபதி மகனை பேர்சொல்லி அழைக்மாட்டார். மகனே என்று அழைப்பார்

    ReplyDelete
  2. ஒருமனிதன் சபாபதி வீடு கிருஷ்ணராஜபுரம் வீடு வீட்டைவீட்டு சென்றவர் உயிரோடு திரும்பமாட்டர் மகனநான்இறுதிசடங்கை இந்துமுறைப்படிசெய்வாய எனவினவுவார்

    ReplyDelete
  3. உலகம் மஆங்கிலோஇந்திய உஉன்மாது நண்பனின் மனைகமவி இரண்டாம் உலகப்போரில் உயிர இழந்தவனர் மனமஅவர்மனைவிக்குஆதராவாகவாழ்வார் கடைசி வரைதொடாமல் தததபண்போடு வாழ்வார்தியாகம் பண்புஈரநெஞ்சம் பிறருக்காவழும்நெஞ்சம் உண்மையான உலகமனிதன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆலமரம்