மணப்பாறை ஸ்பெஷல்
மணப்பாறை முறுக்கு
நான் பல புத்தகம் பற்றி,பல செய்திகள் பற்றி எழுதிருந்தாலும், நான் பிறந்து வளர்ந்த ஊரை பத்தி எழுத முடியாதது சிறு குறையா எனக்கு இருந்தது.இன்னக்கி எங்க ஊர் Special திண்பண்டம் முறுக்கு.அதோட பெருமைய நான் பெருமையா எழுதுறேன்.
என்னாதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும், நொறுக்குத் தீனி இல்லாவிட்டா பெரும்பாலோனோர் தவித்துப் போய்விடுவார்கள். நம் நாட்டில இந்த நொறுக்குத் தீனிகளில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது முறுக்குதான். அப்படி பட்ட முறுக்கு என்ற உடனே மொரு மொரு என்றும் அதன் மனமும் அனைவருக்கும் நினைவு வந்துவிடும், காரணம் முறுக்கு என்பது இந்திய மக்களின் ஒரு பாரம்பரியநொறுக்கு தீனி என்பதை யாராலும் மறுக்க இயலாது.இத்தகைய சிறப்பை பெற்ற முறுக்கு பல ஊர்களில் பலவிதமாக தயாரிக்கப்பட்டாலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு உலக அளவில் இன்றும் பிரபலமாக உள்ளது என்பது அனைவரும் தெரிந்ததே.
மணப்பாறையில் 1930ஆம் ஆண்டுகளில் இம் முறுக்கு தயாரிக்கும் தொழிலானது அறிமுகம் ஆனது. இன்றும் பல குடும்ப மக்கள் இதை பிரதான குடிசை தொழிலாக இங்கு செய்து வருகிறார்கள்.இப்படி வந்த முறுக்கு அதிக ருசியாக இருப்பதன் காரணம் மணப்பாறை நீரின் உப்பு தன்மையே தான் என்று முறுக்கு தயாரிக்கும் பலர் தெரிவிகிறார்கள். மணப்பாறை ஊரின் நீர் இயற்கையாகவே உப்பு தன்மையை கொண்ட ஊர், இந்த உப்பு தன்மையை கொண்ட நீர்கொண்டு இங்கு முறுக்கு தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ருசியாக இருக்கும்.முறுக்கை இரண்டு முறை எண்ணையில் பொறித்து எடுக்கிறார்கள். இதுவும் இதன் ருசிக்கு ஒரு காரணம்.ஆனால் இந்த முறுக்கு தயாரிக்க இங்கு இதற்காக தனியாக அரிசி விளை வித்து அதை பயன்படுத்துகிறார்கள் அதன் காரணமாகவும் மணப்பாறை முறுக்கு ருசியாகவும் அதிக மணமாகவும் இருக்கிறது.
இங்கு தயாராகும் முறுக்கு உலக அளவில் பல விதமான நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்வது இன்றளவும் நடக்கிறது.
பாரம்பரிய மிக்க குடிசை தொழில் இன்று நலிவடைந்து கொண்டு வருகிறது.என்னதான் நாம் நம் சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில்,வெளிநாட்டிற்கு வேலைக்காகவும் மற்றும் படிக்கவும் சென்று இருந்தாலும் அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது.
6 மாதத்துக்கு முன்னாடி புதிய தலைமுறை சேன்ல அழிந்து வரும் குடிசை தொழில்ன்னு மணப்பாறை முறுக்கு தொழில பத்தி போட்டாங்க,பாக்கும்போதே மனசு வலிக்கிது.ஓரு காலத்துல திருச்சியிலிருந்து மணப்பாறை வழியா தென் மாவட்டத்துக்கு போற அத்தனை பஸ்லயும் மணப்பாறை வரப்ப மாரியம்மன் கோவில் Stop ல முறுக்கு விக்குறவங்க கூடைல முறுக்கு எடுத்துகிட்டு பஸ்க்குள்ள வியாபாரம் பண்ணுவாங்க,அவங்க அடுத்த Stop மணப்பாறை பஸ் ஸடான்டு வரதுக்குள்ள கூடையில இருக்க முறுக்கெல்லாம் வித்து போயிடும்.ஆனா இப்ப ஓரு பாக்கெட் வியாபாரம் ஆகவே அவங்களுக்கு கஸ்டமா இருக்கு.அதுமட்டும் இல்ல ஓரு காலத்துல முறுக்கு தயாரிச்சு பல மாவட்டத்துக்கு வியாபாரம் பண்ண வியாபாரி இப்ப இந்த தொழில வேணாம்னு விட்டுட்டு போயிட்டாங்க.இதுமாதிரி பலர்.
பெருமையா ஆரம்பிச்சு,மன வேதனையோட முடிக்கிறதுக்கு நான் வருத்துறேன். நம் பாரம்பரியத்த நாமதான் காக்கனும்.சின்ன குழந்தைக்கு 150 ருபாய் Diary milk வாங்கி தராம 10 ருபா முறுக்கு வாங்கி குடுங்க.இந்த திண்பண்டத்துல எந்த கெடுதலும் இல்லை.மற்ற ஊர்கார நண்பர்கள் மணப்பாறைக்கு வந்தா Miss பண்ணாம அவசியம் முறுக்கு வாங்கி சாப்புடுங்க.
கார்த்திக் கிருபாகரன்
Congragilations dr for ur great startup...
ReplyDeleteeveryone forgots our traditional snack of muruku...A long years back every one should used to eat lot of healthy snacks at all the time especially murukku...but,now a days we are addicted for fast foods and frozen snacks..
It is not good for our health too..
This is a very good startup for those who are all ate frozen snacks and fast foods...!!!
Thank you
DeleteUseful info..
ReplyDeletethank you
DeleteSuperbb
ReplyDeletethanks
DeleteGreat...lines...abt my native....
ReplyDeletethank you
Delete🤩🤩👌👌👌
ReplyDeletethanks
DeleteVery nice 👌👍
ReplyDeleteThank you nanba
DeleteAnna super na
ReplyDeleteThank you bro
DeleteSuper Anna 👌👌👌
ReplyDeleteThank you
Delete👌👌bro
ReplyDeleteThank you bro
Deleteமணப்பாறை முறுக்கு தகவல் இப்போது தான் அறிகிறேன் 👌👌👌
ReplyDeleteநன்றி நண்பா
Deleteசிறப்பு தோழர்...பாரம்பரிய உணவுகள் அழியாமல் காப்போம்...
ReplyDeleteமிக்க நன்றி தோழரே
Delete