தீராக் காதல் ...

பிரிந்த காதலின் வலியின் பதிவுகள் காதலித்தவர்கள்,காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலில் தோற்றவர்கள், முக்கியமாக ஒருதலையாக காதலித்தவர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறுகதைத் தொகுப்பு. "தீராக்காதல்" சொல்ல முயற்சித்து, சொல்லாமலே சிறகு ஒடிந்த காதல் அது. தோற்றுப் போன காதலின் துயரங்களை அழுத்தமாக பதிவு செய்யும் சிறந்த சிறுகதை தொகுப்பு, எல்லோராலும் உணரக்கூடிய தருணங்கள்... ஆசிரியர் G.r. Surendarnath இரண்டு விஷயங்களில் முதன்மையாக தெரிகிறார். ஒன்று விருவிருப்பு,இன்னொன்று கதைக்களம்.பிரிந்த காதலின் தீரா வழியின் பதிவுகள்,ஒருதலை காதலின் வலியின் பதிவுகளை தெளிவாக இதில் பதிய வைத்திருக்கிறார். சொல்லிய காதல், சொல்லாத காதல், சொல்ல முயற்சித்து சொல்லாமலே சிறகு உடைந்த காதல் என அனைத்து வழிகளையும் ஒரு சேர சிறுகதையில் வெவ்வேறு கதைகளின் மூலம் தெரிவித்திருக்கிறார்.நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார். ஆண்கள் காதலில் தோற்றுவிட்டால் கவிதை எழுதுவார்கள், காதலில் தோற்ற கதையை சினிமாவாக எடுப்பார்கள், சிலர் மது பழக்கத்திற்கு அடிமை ஆவார்கள், நண்பர்களிடம் தன் காதலியை பற்றி தவறாக பேசி குட...